இலங்கைசெய்திகள்

இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

Share
இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை
Share

இலங்கை மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

“பெண்களைத் தாக்குவது மற்றும் பாலியல் துன்புறுத்தல் போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பிடப்பட்ட நபர்கள் கடுமையான தவறு செய்துவிட்டார்கள். அவர்கள் தண்டனைக்குரிய குற்றத்தைச் செய்துள்ளனர். அதனால் அது தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.

நவகமவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேலும் தெரிவிக்கையில்,

“இது தொடர்பான சட்டம், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 365 ஏ1 இன் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாரேனும் இதுபோன்ற பிரசாரம் செய்தால், கடூழிய சிறைத்தண்டனை அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. அத்துடன் அபராதம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் அது விசாரணையில் நிரூபிக்கப்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான விடயங்களை, குறிப்பாக சட்டத்தால் தடைசெய்யப்பட்ட விடயங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன.

ஒரு நபர் சமூக ஊடக வலையமைப்பின் மூலம் இவற்றை சமூகமயமாக்கும் போது, ​​அவர் நிச்சயமாக ஒரு பெரிய தவறை செய்கிறார்.

இந்த நவகமுவ சம்பவத்திலும் அந்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...