24 65ffb1e88e8eb
இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பாரிய தவறு

Share

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் பாரிய தவறு

ஆட்பதிவுத் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளில் 22,497 அல்லது 4 சதவீதமானவைகள் பிழையானவை என தெரியவந்துள்ளது.

2022 முதல் 2023ஆம் ஆண்டு வரையிலான ஒரு வருட காலப்பகுதியில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளிலேயே இந்த பிழை ஏற்பட்டுள்ளது.

பொது கணக்கு குழு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இந்த தவறான அடையாள அட்டைகள் PVC வகை மற்றும் ஹெலகார்பனேட் வகையைச் சேர்ந்தவையாகும். இதன் காரணமாக, பாரியளவிலான பணம் வீணடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அது தொடர்பான தகவல்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என, பொது கணக்கு குழுவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

தவறான அடையாள அட்டைகள் வழங்கப்படுவதால் பணம் செலுத்தி அவற்றை பெற்றுக்கொண்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...

Untitled 102
செய்திகள்இலங்கை

ரூபவாஹினி கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் விளக்கமறியலில்

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்ட, இலங்கை ரூபவாஹினி...