டுபாயில் மறைந்திருக்கும் பாதாளக் குழு உறுப்பினர்களை பிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை
இலங்கைசெய்திகள்

டுபாயில் மறைந்திருக்கும் பாதாளக் குழு உறுப்பினர்களை பிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை

Share

டுபாயில் மறைந்திருக்கும் பாதாளக் குழு உறுப்பினர்களை பிடிக்க இலங்கை அரசு நடவடிக்கை

டுபாயில் இருந்து கொண்டு இலங்கையில் போதைப்பொருள் வியாபாரம் செய்யும், கப்பம் அறவிடும், கொலைகள் புரியும் இலங்கையின் பாதாளக் குழு உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கம் விசேட வேலைத்திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

அந்நாட்டுப் பொலிஸாரின் உதவியுடன் அவர்களைக் கைது செய்து நாட்டுக்குக் கொண்டு வருவதற்குப் பொலிஸ் திணைக்களமும் சட்டம், ஒழுங்கு அமைச்சும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

34 பாதாளக் குழு உறுப்பினர்கள் டுபாயில் இருந்துகொண்டு இலங்கையில் பல குற்றச் செயல்களைப் புரிந்து வருகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு செயற்படுவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது.

இலங்கை வர்த்தகர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து அவர்களிடமிருந்து கப்பம் பெறும் வலையமைப்பை இயக்கிய முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டதையடுத்தே மேலும் இரு குற்றவாளிகள் வலையமைப்பு குறித்து தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறு மிரட்டல் விடுத்து கோடிக்கணக்கில் கப்பம் கோரும் துபாயில் பதுங்கியிருக்கும் திட்டமிட்ட குற்றவாளிகள் இருவர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளிவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....