30 2
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் முறுகலை உன்னிப்பாக கவனிக்கும் இலங்கை

Share

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் நிலவும் பதற்ற நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இன்றைய(08.05.2025) அமர்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் சூழ்நிலையின் வளர்ச்சி குறித்து வெளியுறவு அமைச்சகம் விழிப்புடன் உள்ளதோடு இது சம்பந்தமாக அரசாங்கத்திற்கு விளக்கமும் அளித்து வருகின்றது.

அரசாங்கத்தின் கொள்கை தீர்மானத்தின்படி, இந்தியப் பெருங்கடலில் புவிசார் அரசியல் மோதல்களில் இலங்கை ஈடுபடாது.

அத்துடன், நாங்கள், எங்கள் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதே வேளையில், அணிசேரா கொள்கையில் செயற்படுகிறோம்.

எந்தவொரு வகையான பயங்கரவாதத்தையும் நாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கவோ ஆதரிக்கவோ மாட்டோம். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் முயற்சியில் எந்த நேரத்திலும் ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

 

Share

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...