rtjy 57 scaled
இலங்கைசெய்திகள்

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

Share

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் உறுப்பு நாடாக இலங்கை

உலகின் மிகப்பெரிய கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் 39வது உறுப்பு நாடாக இணைந்துள்ள இலங்கையை ஒன்றிணைந்த கடல்சார் படைகள் வரவேற்றுள்ளன.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் ஒரு பகுதியாக இலங்கை இருப்பதில் தாம் மகிழ்ச்சியடைவதாக கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவின் தளபதி வைஸ் அட்மி பிராட் கூப்பர் கூறியுள்ளார்.

மேலும், உலகின் மிக முக்கியமான நீர்வழிகள் சிலவற்றைப் பாதுகாக்கும் மத்திய கிழக்கில் வளர்ந்து வரும் சர்வதேச கடற்படைக் கூட்டிற்கு இலங்கையை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவுடன் இணைவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்ட நாட்டின் கடற்படைத் தளபதி வைஸ் அட்எம்.பிரியந்த பெரேரா, சர்வதேச பாதுகாப்பு கூட்டுறவு மற்றும் பிற பங்காளி நாடுகளுடன் கூட்டுப் பயிற்சிகள், கண்காணிப்புகள் மற்றும் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க இலங்கை ஆர்வமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு கூட்டுறவானது பயங்கரவாதத்தை தோற்கடிப்பது, கடற்கொள்ளையைத் தடுப்பது, பிராந்திய ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் பாதுகாப்பான கடல்சார் சூழலை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

அத்துடன் உலகின் மிக முக்கியமான சில கப்பல் பாதைகளை உள்ளடக்கிய 3.2 மில்லியன் சதுர மைல் நீர் முழுவதும் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஆதரிப்பதன் மூலம் கடற்படை கூட்டாண்மை சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...