rtjy 282 scaled
இலங்கைசெய்திகள்

காதலர்களுக்கு முக்கிய தகவல்

Share

காதலர்களுக்கு முக்கிய தகவல்

காதல் உறவை பேணுவதற்காக பொலிஸாரின் அனுமதி பெறும் விண்ணப்ப படிவம் உள்ளதாக குறிப்பிட்டு அந்த விண்ணப்ப படிவத்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மேலும் காதல் உறவைப் பேணுவதற்கு பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் விளக்கமளிக்கையில்,

இந்தத் தகவல் முற்றிலும் தவறானது எனவும் அத்தகைய அனுமதி விண்ணப்பம் எதுவும் இல்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், இது தொடர்பான குறிப்பு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் பேஸ்புக்கில் பரவி வரும் ஒரு குறிப்பேடு எனவும் இந்த நாட்களில் மீண்டும் பரிமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம நகரிலுள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான பூங்காவில் மூடப்பட்ட சிறிய அறைகளில் பொழுதைக் கழித்த இளையவர்களை தேடி சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த விண்ணப்ப படிவம் மீண்டும் பரப்பப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை வயதுடைய மாணவர்கள் பூங்காவிற்கு செல்லும் போது மூடப்பட்ட அறைகளில் அநாகரீகமாக நடந்து கொள்வதாக அப்பகுதி மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து ஹோமாகம பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...