8 5
இலங்கைசெய்திகள்

உலகை உலுக்க காத்திருக்கும் மற்றுமொரு வைரஸ்: முன்னாயத்தமாகும் இலங்கை

Share

உலகை உலுக்க காத்திருக்கும் மற்றுமொரு வைரஸ்: முன்னாயத்தமாகும் இலங்கை

சீனாவில் (China) பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்தி வருவதாக தொற்றுநோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான தகவல்களை இன்று (03) அறிந்து கொண்டதாகவும், உரிய ஆய்வின் பின்னர் ஊடகங்களுக்கு தகவல்களை வழங்கவுள்ளதாகவும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், சீனாவில் ஹியூமன் மெட்டாப்நியூமோவைரஸ் (HMPV) என்ற புதிய வைரஸ் தொற்று பரவி வருகிறது.

இந்த வைரஸ் நிலைமையினால் பாதிக்கப்பட்ட நபர்களால் சீனாவிலுள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் HMPV காரணமாக கடுமையான பாதிப்புக்குள்ளாகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் சீன மருத்துவர்களும் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 77
செய்திகள்இலங்கைபிராந்தியம்

செவனகலையில் 1,000 லீற்றர் மண்ணெண்ணெய் பறிமுதல்: இருவர் கைது!

மொனராகலை மாவட்டம், செவனகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தண்டுவ பகுதியில், எவ்வித அனுமதிப்பத்திரமுமின்றி சட்டவிரோதமான முறையில் லொறி...

Untitled 76
செய்திகள்உலகம்

ஈரானில் அமெரிக்க போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது: பரபரப்பான பின்னணி!

ஈரானின் வான்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன போர் விமானத்தை, தங்கள் நாட்டின் புதிய வான்...

Untitled 75
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அநுராதபுரத்தில் அதிரடிச் சோதனை: காலாவதியான அரிசி பறிமுதல்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுப் பண்டிகை காலத்தை முன்னிட்டு, நுகர்வோருக்குப் பாதுகாப்பான உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி...

Untitled 74
செய்திகள்இலங்கைபிராந்தியம்

களுத்துறை பொலிஸ் கல்லூரி பட்டமளிப்பு விழா: 280 அதிகாரிகள் நியமனம்!

களுத்துறை பொலிஸ் கல்லூரியில் தங்களது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த 280 பயிலுநர் பொலிஸ்...