tamilnihj scaled
இலங்கைசெய்திகள்

கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை

Share

கடனைத் திருப்பிச் செலுத்த கால அவகாசம் கோரியுள்ள இலங்கை

கடனைத் திருப்பிச் செலுத்தாதது தொடர்பாக பத்திரப்பதிவுதாரர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் நியூயோர்க் நீதிமன்ற நீதிபதியிடம், மேலும் ஐந்து மாத கால அவகாசத்தை இலங்கை கோரியுள்ளது.

தனியார் கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவே இந்த கூடுதல் அவகாசம் வேண்டும் என்று இலங்கை குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக 2022, ஜூலையில் ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் வழக்கை தாக்கல் செய்தது.

இதன்போது இலங்கை அரசு, அந்த மாதத்தில் செலுத்த வேண்டிய 250 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான டொலர் பத்திரத்தின் முழுப் பணத்தையும் கோரியது.

கடந்த நவம்பரில் இடம்பெற்ற விசாரணையின்போது கடன்களை செலுத்துவதற்காக இலங்கைக்கு காலதாமதம் வழங்கப்பட்டது. இந்தநிலையில் அந்த காலதாமதத்தை நீடிக்குமாறு இலங்கை நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது கோரியுள்ளது.

ஹாமில்டன் ரிசர்வ் நிறுவனம் இலங்கையின் புதிய கோரிக்கையை எதிர்த்தது.கடன் மறுசீரமைப்பு தொடர்பான பலமுறை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோதும், இலங்கை அரசு அதனை முன்னெடுக்கவில்லை என்று வங்கி குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
23 6535db6a64ba7
செய்திகள்இலங்கை

மோசமான காலநிலையால் இலங்கையில் 5 இலட்சத்திற்கும் அதிகமான சிறுவர்கள் பாதிப்பு – ஐக்கிய நாடுகள் சபை கவலை!

இலங்கையில் அண்மைக் காலமாக நிலவி வரும் சீரற்ற காலநிலையால் சுமார் 527,000 சிறுவர்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக...

articles2FRGAP8jR5fJmot12PYdxp
செய்திகள்இலங்கை

62 பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு நியமனம்: வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தூரப்பகுதிகளுக்கு முன்னுரிமை!

இலங்கை சுகாதார சேவையை வலுப்படுத்தும் நோக்கில், 62 புதிய பல் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கான நியமனக் கடிதங்கள்...

25 6950d161858e7
செய்திகள்உலகம்

சீனக் கிராமத்தில் வினோத சட்டம்: வெளியூர் திருமணம் மற்றும் குடும்பச் சண்டைகளுக்குப் பாரிய அபராதம்!

தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லிங்காங் (Lincang) மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமம், திருமணம்...

FB IMG 1764515922146 818x490 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளி பாதிப்பு: 79 சதவீத தொடருந்து மார்க்க புனரமைப்புப் பணிகள் நிறைவு!

டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட தொடருந்து மார்க்கங்களில் 79 சதவீதமான...