1 13
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் களம் இறங்க கடும் போட்டி

Share

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் களம் இறங்க கடும் போட்டி

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சியில் சார்பில் போட்டியிடுவதற்கு அதிகளவானவர்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்புமனுவை பெற மிக அதிக அளவில் போட்டி ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வேட்புமனுவை எதிர்பார்த்து காத்திருந்தும் அது கிடைக்காத சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதற்கு முன்னரும் கடுமையாக உழைத்த சிலர், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிடலாம் என நம்புகின்றனர்.

ஆனால் ஒரு கட்சியில் இருந்து போட்டியிடக்கூடிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாக இருப்பதாலும், பெறப்பட்ட கோரிக்கைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதாலும் பலர் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இந்நிலைமை தொடர்பில் பலர் அதிருப்தியில் இருப்பது தெரியவருகிறது.

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...