23 4
இலங்கைசெய்திகள்

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

Share

அரசியலில் களமிறங்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஷான்! ரஞ்சனுடன் இணைவு

நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றையதினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய ஜனநாயகக் குரல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சி கொழும்பில் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவராக முன்னாள் அமைச்சரான ரஞ்சன்‌ ராமநாயக்க செயற்படுவதோடு, தேசிய அமைப்பாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கட்சியானது எதிர்வரும் பொதுத் தேர்தலில் மைக் சின்னத்தில் களமிறங்கவுள்ளனர்.

கட்சியின் வேட்பாளர்களாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் திலகரத்ன டில்ஷானும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மேலும் பல பிரபலங்கள் கட்சிக்குள் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, எனது குடியுரிமை நீக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்குச்சீட்டு கிடைக்கப்பெற்றது. ஆகவே என்னால் தேர்தலில் வாக்களிக்கவும் ,போட்டியிடவும் முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...