11 8
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தலின் போது மை பூசப்படும் விரலில் மாற்றம்

Share

பொதுத் தேர்தலின் போது மை பூசப்படும் விரலில் மாற்றம்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பின் போது இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க(SamanRatnayaka) தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிப்பின் போது, வாக்காளர்களின் சிறிய விரலில் மை பூசப்பட மாட்டாது. அதற்கு பதிலாக இடது கையின் ஆள்காட்டி விரலில் மை பூசப்படும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் இடது கையின் சிறிய விரலுக்கு மை பூசினோம்.பலருக்கு இன்னும் மை அடையாளங்கள் உள்ளன. எனவே, இம்முறை இடது கையின் ஆள்காட்டி விரலை குறியிட தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான அனைத்து முதற்கட்டப் பணிகளும் நிறைவடைந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று (11) நள்ளிரவுடன் நிறைவடையும். இன்னும் 3 நாட்களில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் 17,140,354 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

அத்துடன், இந்த வருட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக சர்வதேச கண்காணிப்பாளர்கள் குழுவொன்று ஏற்கனவே இலங்கைக்கு வருகைதந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 68fa2cc1432fd
செய்திகள்இலங்கை

பாடசாலை விருது விவகாரம்: மாணவியின் பகிரங்கக் குற்றச்சாட்டை அடுத்து அதிபரிடம் அறிக்கை கோரியது கல்வி அமைச்சு!

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் அண்மையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவி ஒருவர் மேடையில்...

images 6 6
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசியல் இனி செல்வம் சேர்க்கும் தொழில் அல்ல, அது ஒரு சமூகப் பணி – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி!

அரசியலைச் செல்வம் குவிக்கும் ஒரு தொழிலாகப் பார்ப்பதை நிறுத்தி, அதனைப் பொதுமக்களுக்குச் சேவை செய்யும் ஒரு...

25 6947f8ecd0dc8
செய்திகள்அரசியல்இலங்கை

கிளிநொச்சியில் அரசியல் சந்திப்பு: சிவஞானம் – சந்திரகுமார் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு....

images 6 6
செய்திகள்அரசியல்இலங்கை

தனியார் காணிகள் விடுவிக்கப்படும்; சான்றிதழ் வழங்கும் நிகழ்வைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம் – அமைச்சர் சுனில் செனவி!

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விஹாரை விவகாரத்திற்கு விரைவில் முறையான தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என புத்தசாசனம்,...