images 6 6
இலங்கைஅரசியல்செய்திகள்

அரசியல் இனி செல்வம் சேர்க்கும் தொழில் அல்ல, அது ஒரு சமூகப் பணி – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி!

Share

அரசியலைச் செல்வம் குவிக்கும் ஒரு தொழிலாகப் பார்ப்பதை நிறுத்தி, அதனைப் பொதுமக்களுக்குச் சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றுவதற்கான பொறுப்பை அரசாங்கம் தற்பொழுது நிறைவேற்றி வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் (SLMA) 99 ஆவது மற்றும் 100 ஆவது கெடட் அதிகாரிகள் விடுகை அணிவகுப்பில் உரையாற்றிய ஜனாதிபதி, இராணுவத்தினரின் அர்ப்பணிப்பைக் கௌரவித்தார்.

ஒவ்வொரு கடினமான காலகட்டத்திலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை ஈடு இணையற்றது. தாய்நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் மிக உயரிய பொறுப்பு இராணுவத்திடம் உள்ளது. அந்தப் பொறுப்பினை இராணுவத்தினர் செவ்வனே நிறைவேற்றுவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அரசாங்கத்திற்கு இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் அரசியல் என்பது குறுகிய காலத்தில் சொத்துக்களைச் சேமிக்கும் ஒரு வழியாகக் கருதப்பட்டதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த கலாசாரத்தை மாற்றி, அரசியல்வாதிகள் தங்களை மக்கள் சேவகர்களாக அடையாளப்படுத்திக் கொள்ளும் புதிய யுகத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...