இலங்கைசெய்திகள்

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

6 18
Share

உகண்டாவிற்கு கொண்டு செல்லப்பட்ட டொலர்கள்! பலமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறும் நாமல்

ராஜபக்சக்கள் விமானம் மூலம் உகண்டாவிற்கு டொலர்களை கொண்டு சென்றார்கள் என எமது அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்கத்தை எமக்கு ஏற்படுத்தியிருந்தன என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் எமக்கு சிறந்த பாடத்தைக் கற்பித்தார்கள். அதனை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்தலுக்கு சிறப்பாக தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.

எம்மில் காணப்பட்ட குறைபாடுகள், தவறுகளை திருத்திக் கொண்டு தற்போது பயணிக்க ஆரம்பித்துள்ளோம். புத்துணர்ச்சியுடன் பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றோம்.

மக்கள் எமது வேலைத்திட்டங்களை வெற்றி பெறச் செய்வார்கள் என்று நம்புகின்றோம். அவர்கள் வழங்கும் தீர்ப்பிற்கமைய நாம் எமது பொறுப்பை நிறைவேற்றுவோம்.

எமது அரசாங்கத்தை வெளியேற்றுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், ராஜபக்சக்கள் உகண்டாவிற்கு விமானம் மூலம் டொலர்களை கொண்டு சென்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பலமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால், டொலர்கள் இன்மையினாலேயே அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடும் வரிசையும் ஏற்பட்டது என்பதை பலரும் அறிந்திருந்தனர்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...