இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம்

Share
24 6619f1681af5d
Share

எரிபொருள் விநியோகம் தடைபடும் அபாயம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) பெற்றோலிய விநியோகஸ்தர்களுக்கு மூன்று சதவீத தள்ளுபடியில் 18 சதவீத வட் (VAT) வரியை நடைமுறைப்படுத்தியுள்ளமை பெரும் சுமையாக இருப்பதாகவும் தாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம் எனவும் இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவர் குசும் சந்தநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,இலாபமின்றி வட் (VAT) செலுத்துவது, நாடு முழுவதும் உள்ள 60 சதவீத எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எங்கள் கருத்துக்களை கேட்கத் தவறினால், நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்.

இது தொடர்பில் CPC, Sinopac, IOC, மற்றும் RM Parks (Private) Limited உட்பட அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம்.

இதன்படி கடந்த 11 ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க முடிவு செய்தோம்.

ஆனால் ஒரு பொறுப்புள்ள சங்கமாக, நுகர்வோர் சிரமத்திற்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்காக ஏப்ரல் 20 ஆம் திகதி வரை தடையின்றி எரிபொருள் விநியோகத்தை உறுதி செய்தோம்.

CPC எங்கள் கவலைகளைக் கேட்கத் தவறினால், நாங்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு வருவோம்.

நாடு முழுவதும் உள்ள 60 சதவீத எரிபொருள் நிரப்பும் மையங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விவகாரம் குறித்து அனைத்து உறுப்பினர்களையும் எச்சரிக்க எங்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

VAT செலுத்த அவர்கள் தயாராக இருந்தபோதிலும், இந்த தள்ளுபடியில் VAT விதிக்கப்படுவது சட்டவிரோதமானது என தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...