30 1
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை : குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கஞ்சன

Share

எரிபொருள் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை : குற்றச்சாட்டுக்கு பதிலளித்த கஞ்சன

எரிபொருள் விலைச்சூத்திரம் தொடர்பில் முன்னாள் அரசாங்கம் மற்றும் அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) பதிலளித்துள்ளார்.

அதாவது, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தின்படி, நீதிமன்ற தீர்ப்புக்கு அமைவாக அப்போதைய அரசாங்கங்களின் அமைச்சரவை அமைச்சர்கள், செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக கஞ்சன விஜேசேகர தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “தற்போதைய அரசாங்கத்துடன் தொடர்புடைய சில தனிநபர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானவை.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கட்டணச் சூத்திரத்தை முந்தைய அரசாங்கம் செயற்படுத்துவதைத் தடுக்கும் வகையில், பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் 2022 ஆம் ஆண்டில் உயர் நீதிமன்றத்திடமிருந்தும், 2023 ஆம் ஆண்டில் மேல்முறையீட்டு நீதிமன்றத்திடமிருந்தும் உத்தரவுகளைப் பெற்றது.

இருப்பினும், உயர் நீதிமன்றம் 2024 ஓகஸ்ட் 30 அன்று அந்த உத்தரவை இரத்து செய்து ஒரு உத்தரவைப் பிறப்பித்தது.

மேலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த உத்தரவை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்த வழிமுறைகளைக் கோரி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு சட்டமா அதிபர் அலுவலகத்திற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பியது” என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...