rtjy 127 scaled
இலங்கைசெய்திகள்

மின்சார விநியோகம் குறித்து அமைச்சர் அறிவிப்பு

Share

மின்சார விநியோகம் குறித்து அமைச்சர் அறிவிப்பு

எதிர்வரும் வாரத்தில் தொடர் மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்துமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, திட்டமிடப்பட்ட அனைத்து மின்வெட்டுகளையும் இடைநிறுத்துமாறு அவர் அறிவித்துள்ளார்.

பராமரிப்பு நோக்கங்களுக்காக திட்டமிடப்பட்ட மின் தடைகள் குறித்த சர்வதேச அளவுகோல்களுடன் மின்சார சபை வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது.

மின்சார விநியோகம் அடிக்கடி இடைநிறுத்தப்படுவதாக நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை மீளாய்வு செய்த அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வார இறுதி நாட்களில் பராமரிப்பு பணிகளுக்காக தேவையற்ற திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளும் அமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது

மேலதிக நேர கொடுப்பனவுகளுக்காக மின்சார சபை பெருமளவிலான பணத்தை செலவிடுவதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...