20 1
இலங்கைசெய்திகள்

மே மாதம் பணவீக்கம் வீழ்ச்சி

Share

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் நாடளாவிய ரீதியிலான பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதம் 33.6 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது கடந்த மேமாதத்தில் 22.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இப்பணவீக்க வீழ்ச்சிக்குக் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மேமாதத்தில் உணவு மற்றும் உணவல்லாப்பொருட்களின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட வீழ்ச்சியே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டு மேமாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு மேமாதம் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள அதிகரிப்புக்கு மேற்குறிப்பிட்ட பொருட்களின் விலைகள், கட்டணங்கள் உயர்வடைந்தமையே காரணமாகும்.

குறிப்பாக மேமாத காலப்பகுதியில் புதிய மீன், மரக்கறி, சீனி, கோழி இறைச்சி, மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, இஞ்சி, வெள்ளைப்பூடு, பெரிய வெங்காயம், தேசிக்காய், கருவாடு போன்ற உணவுப்பொருட்களின் விலைகள் அதிகரித்த போதிலும், புதிய பழங்கள், பால்மா, அரிசி, தேங்காய், மிளகாய்தூள், தேங்காய் எண்ணெய், பாண், முட்டை, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், சிவப்பு வெங்காயம் ஆகிய உணவுப்பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்று தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெணின் பிரகாரம், பொருளாதாரத்தில் தளம்பல் அடையும் விலைகளைக்கொண்ட உணவு, சக்திவலு மற்றும் போக்குவரத்து போன்றவை தவிர்ந்த ஏனையவற்றுக்கான மையப்பணவீக்கமானது கடந்த ஏப்ரல் மாதம் 31.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது மேமாதத்தில் 21.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...