8 7 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

Share

இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் தகவல்

இலங்கை தனது பொருளாதார சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை கால அட்டவணைக்குள் முடிக்க எதிர்பார்த்துள்ள நிலையில், இரண்டாவது தவணை நிதியுதவியை பெறுவதற்கான பாதையில் உள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் இதனை தெரிவித்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் நிதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுப்ரமணியன் இதனை குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்து, சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது தவணையை பெறும் பாதையில் இலங்கை பிரவேசித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இரண்டாவது தவணையை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையிடமிருந்து அனுமதி பெறப்படும் என்ற நம்பிக்கையை வெளியிட்டார்.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...