24 660b95dbad8d8
இலங்கைசெய்திகள்

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

Share

நாட்டில் வெங்காய இறக்குமதியில் பாரிய மோசடி

கடந்த வருடம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்த சில வர்த்தகர்கள் 8,000 கோடி ரூபாவுக்கும் மேல் இலாபமீட்டியுள்ளதாக வெளிக்கொணரப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தவிசாளராக செயற்படுகின்ற வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று (01.3.2024) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கை ஊடாகவே உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, உலர்த்தப்பட்ட நெத்திலி, மாசிக் கருவாடு, பாசிப்பயறு ஆகியவற்றின் ஊடாக சம்பாதித்த விதம் வெளிக்கொணரப்பட்டது.

2022ஆம் ஆண்டில் துறைமுகத்தில் இறக்கப்பட்ட போது ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 103 ரூபாவாகும்.

இது காப்புறுதி, கொள்கலன் கட்டணம், இறக்குமதி வரி உள்ளிட்ட செலவுகள் உள்ளடங்கிய விலையாகும்.

ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் கொழும்பு சந்தையில் 213 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய முதலீட்டுடன் ஒப்பிடுகையில் 109 ரூபா இலாபம் ஈட்டப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த இலாபம் 273 ரூபா வரை அதிகரித்துள்ளது.

இந்த பொருட்களை விற்பனை செய்ததன் ஊடாக ஒரு சிலர் மாத்திரம் வழமைக்கு மாறான இலாபத்தை பெற்றுள்ளதாக வழிவகைகள் பற்றிய தெரிவுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

துறைமுகத்தில் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் விசேட வர்த்தக வரி கொள்கலன் கட்டணம் உள்ளடங்களாக ஒரு கிலோகிராமுக்கான செலவிற்கும் சந்தையில் விற்பனை விலைக்கும் இடையே பாரிய வேறுபாடு காணப்படுகின்றமை தொடர்பாக தெரிவுக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வேறுபாடு ஊடாக கிடைத்த இலாபம் 100 ரூபாவில் இருந்து 1000 ரூபா வரை காணப்படுகிறது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...