இலங்கையில் தீவிரமடையும் நோய்!! 32 பேர் மரணம்
இலங்கைசெய்திகள்

இலங்கையில் தீவிரமடையும் நோய்!! 32 பேர் மரணம்

Share

இலங்கையில் தீவிரமடையும் நோய்!! 32 பேர் மரணம்

நாடாளவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்போது இராணுவம், பொலிஸ் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். கடந்த ஆறு மாதங்களில் நாளாந்தம் 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது நாளாந்தம் 200 டெங்கு நோயாளர்கள் மட்டுமே பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.

கடந்த ஆறு மாதங்களில் 51,768 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 32 மரணங்கள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், டெங்கு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுகாதார வைத்திய அதிகாரியின் 48 பிரிவுகள் அதிக ஆபத்துள்ள பிரிவுகளாகவும், அதிகூடிய டெங்கு நோயாளர்கள் 25,835 பேர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாக நளின் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.

அதற்கு மேலதிகமாக மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்கள் அதிகம் காணப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...