14 28
இலங்கைசெய்திகள்

இருதரப்பு உறவை ஆழப்படுத்தும் முயற்சியில் இலங்கை – சீனா

Share

இருதரப்பு உறவை ஆழப்படுத்தும் முயற்சியில் இலங்கை – சீனா

இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் சீனாவும் இலங்கையும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் ஆகியோருக்கு இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பரஸ்பர செழுமையை வளர்ப்பதற்கு முதலீடு மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சந்திப்பின் போது, இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கத்தின் ஆதரவை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...