14 28
இலங்கைசெய்திகள்

இருதரப்பு உறவை ஆழப்படுத்தும் முயற்சியில் இலங்கை – சீனா

Share

இருதரப்பு உறவை ஆழப்படுத்தும் முயற்சியில் இலங்கை – சீனா

இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் சீனாவும் இலங்கையும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென்ஹொங் ஆகியோருக்கு இடையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பரஸ்பர செழுமையை வளர்ப்பதற்கு முதலீடு மற்றும் ஒத்துழைப்பிற்கான புதிய வழிகள் தொடர்பில் கருத்தாடல்கள் இடம்பெற்றதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சந்திப்பின் போது, இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கத்தின் ஆதரவை தூதுவர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பங்காளித்துவத்தை வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...