1 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல்

Share

இலங்கையின் வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல்

இலங்கைக்குள் நுழைந்து இணையக் குற்றங்களை செய்யும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தாக மாறியுள்ள உக்ரேனியர்கள், இந்தியர்கள் மற்றும் பல்கேரிய குழுக்களை கைது செய்ய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த குழுவினை கைது செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நீண்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு உக்ரேனிய சைபர் குற்றவாளிகள் ஏற்கனவே இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இணையக் குற்றவாளிகள் இலங்கைக்கு வருவதற்கு முன்னர், இலங்கையின் வங்கிச் செயற்பாடுகளை இணையத்தில் மிகவும் உன்னிப்பாக கண்காணித்ததாகவும் இரகசியப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...