தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்

Share

தமிழர் பகுதியில் இராணுவம் முக்கிய தீர்மானம்

ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் வடக்கில் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் நேற்று (16.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,“தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தான் வடக்கில் இராணுவத்தினர் வசம் குறைந்தபட்ச அளவிலான காணிகள் காணப்படுகின்றன. பிரிவினைவாதம் வடக்கு மாகாணத்தில் தோற்றம் பெற்றதால் ஏனைய மாகாணங்களை காட்டிலும் வடக்கு மாகாணத்திலேயே அதிகளவில் பாதுகாப்பு முகாம்கள் அமைக்க வேண்டும்.

ஜனாதிபதியின் அழுத்தத்தை தொடர்ந்து எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் 377 ஏக்கர் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை திருப்திப்படுத்துவதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் காணிகளை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவத்துக்கு தொடர்ந்து அழுத்தம் பிரயோகிக்கிறார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 09 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்களுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியிருந்தார்.

2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 26,812 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னரான காலப்பகுதியில் 22,919 ஏக்கர் நிலப்பரப்பு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் வசமிருந்த காணிகளில் 85 சதவீதமானரை இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாணத்தில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டிய தேவை தமிழ் அரசியல்வாதிகளுக்கு காணப்படுகிறதே தவிர அப்பிரதேசங்களில் வாழும் தமிழர்களுக்கல்ல, பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாமை அகற்ற அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு எதிராக அப்பிரதேச மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

‘இராணுவ முகாமை அகற்றினால் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும்,இப்பகுதி போதைப்பொருள் வியாபாரிகள்,சட்டவிரோத செயற்பாட்டாளர்களின் கொலனியாகும்’ஆகவே முகாமை அகற்ற வேண்டாம் என வலியுறுத்தி தமிழ் மக்கள் இராணுவ தலைமையகத்துக்கு மனுக்களை சமர்ப்பித்துள்ளார்கள்.”என கூறியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...