tamilni 105 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இராணுவத்தளபதிக்கு புதுடெல்லியில் கம்பள வரவேற்பு

Share

இலங்கையின் இராணுவத்தளபதிக்கு புதுடெல்லியில் கம்பள வரவேற்பு

இலங்கையின் இராணுவத்தளபதி புதுடெல்லியில் தனது இந்திய இராணுவத்தளபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்திய இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவின் அழைப்பின் பேரில் நேற்று புதுடெல்லியில் உள்ள இந்திய இராணுவத் தலைமையகத்துக்கு இலங்கையின் இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே சென்றபோது சிவப்புக் கம்பள வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் இலங்கை இராணுவத்தளபதி தேசிய போர் வீரர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இந்திய இராணுவப்படையணியினர், இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விகும் லியனகேக்கு கௌரவ மரியாதை அணிவித்தனர்.

இந்நிலையில் இந்திய இராணுவ தலைமையகத்தில் உள்ள அலுவலகத்தில், இலங்கையின் இராணுவத்தளபதி, இந்திய இராணுவத்தின் இராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேவுடன் முறையான கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயிற்சி தொகுதிகளை மேம்படுத்துதல், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் இரு படைகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்பான விடயங்கள் பேசப்பட்டன.

இலங்கை இராணுவத்தளபதி, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் அனில் சௌஹானையும் சந்திக்க உள்ளார்.

இந்த சந்திப்புகள் மற்றும் இருதரப்பு விவாதங்கள் இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான பகிரப்பட்ட இலக்குகளை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன’ என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
11 8
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

இலங்கையில் தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி: சந்தை ஆய்வாளர்கள் தகவல்!

கடந்த வாரம் ஈரான் – இஸ்ரேல் பிராந்திய மோதல்களினால் உச்சத்தை எட்டியிருந்த தங்கத்தின் விலையானது, இந்த...

10 8
செய்திகள்உலகம்

ஈரானுடனான போரில் முழுமையான வெற்றி பெறும் வரை பின்வாங்க மாட்டோம்: அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் எச்சரிக்கை!

ஈரானுடனான தற்போதைய இராணுவ மோதலில் வெற்றி பெறுவதற்குத் தேவையான எந்தவொரு தூரத்திற்கும் செல்ல அமெரிக்கா தயாராக...

09 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக வலைத்தள காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட ஆபத்தான சாரதி: மோட்டார் சைக்கிளுடன் இளைஞர் கைது!

பொது வீதிகளில் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், விபத்துக்களைத் தூண்டும் விதமாகவும் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய...

08 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நடப்பாண்டின் முதல் இரு மாதங்களில் 422 பேர் சாலை விபத்துக்களில் பலி!

இலங்கையில் இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் கடந்த மார்ச் 2-ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பதிவாகியுள்ள...