dd 1
இலங்கைசெய்திகள்

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

Share

2025 ல் பலம்பெறப்போகும் சிறிலங்கா விமானப்படை : வந்து குவியப்போகும் விமானங்கள்

2025 ஆம் ஆண்டில்  சிறிலங்கா விமானப்படை(sri lanka air force) ஒன்பது புதிய விமானங்களைப் பெறவுள்ளது. அமெரிக்காவிலிருந்து(us) எட்டு பெல் 206 உலங்கு வானூர்திகளும் பாகிஸ்தானில் (pakistan)இருந்து ஒரு FT-7 பயிற்சி விமானமும் கிடைக்கவுள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், அமெரிக்கா எட்டு TH-57 சீ ரேஞ்சர் பெல் 206 உலங்கு வானூர்திகளை விமானப்படைக்கு வழங்கும் என்று விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர், சிறிலங்கா விமானப்படையின் விமானத் திறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த உலங்கு வானூர்திககள் வழங்கப்படுகின்றன.

எதிர்காலத்தில் விமானப்படைக்கு பாகிஸ்தான் ஜெட் விமானம் கிடைக்கும் என்றும், விமானப்படை கடற்படையை மேலும் பலப்படுத்தும் என்றும் விமானப்படை தளபதி கூறினார்.

கடந்த ஆண்டு செப்டம்பரில், சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்காவிடமிருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 360ஈஆர் விமானமும், டிசம்பரில் அவுஸ்திரேலியாவில் (australia)இருந்து பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானமும் கிடைத்தன.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...