24 6663dd28308e6
இலங்கைசெய்திகள்

மாலைதீவுடன் இணக்கம் வெளியிட்டுள்ள இலங்கை

Share

மாலைதீவுடன் இணக்கம் வெளியிட்டுள்ள இலங்கை

இலங்கை (Sri Lanka) தனது பிரத்தியேக பொருளாதார வலயம் அல்லது நாட்டின் பிராந்திய கடலின் அளவை விஸ்தரிக்கும் முயற்சியில் மாலைதீவுடன் (Maldives) இராஜதந்திர மோதல்களை வெற்றிகரமாக தவிர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு பிரத்தியேக பொருளாதார மண்டலம் என்பது கடலின் ஒரு பகுதியாகும். பொதுவாக ஒரு நாட்டின் பிராந்திய கடலுக்கு அப்பால் 200 கடல் மைல்கள் அளவில் இது நீடிக்கப்படுகிறது.

இந்தநிலையில் இலங்கை தமது கடல்பிராந்தியத்துக்கு அப்பால் 200 கடல் மைல்களுக்கு தமது பிரத்தியேக பொருளாதார வலயத்தை விஸ்தரித்துக் கொள்வதற்காக, 2009ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளிடம் தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான தரவுகள் மற்றும் பிற தகவல்களை சமர்ப்பித்தது.

இதன் அடிப்படையில் ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு, இலங்கையுடன் இந்த விடயத்தில் ஈடுபட ஒரு துணை ஆணைக்குழுவை 2016இல் நிறுவியது.

இதனையடுத்து இலங்கை பிரதிநிதிகள் 11 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.குறித்த விரிவாக்கத்தில் மாலைதீவுக்கும் உரிமை கோரல் இருந்துள்ளன.

எனினும் விடயத்தில் இரண்டு தரப்புக்களும் ஒத்துழைப்புடன் செயற்பட இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....