இலங்கைசெய்திகள்

இலங்கையில் 8 மாதங்களில் 1613 பேர் விபத்தில் பலி

tamilni 156 scaled
Share

இலங்கையில் 8 மாதங்களில் 1613 பேர் விபத்தில் பலி

இலங்கையில் இந்த வருடத்தின் முதல் எட்டுமாத காலப்பகுதிக்குள் இடம்பெற்ற 1427 விபத்துக்கள் மூலம் 1613 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் போக்குவரத்து நிர்வாக பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இவற்றில் 632 மோட்டார் சைக்கிள் விபத்துக்களாகும். கடந்த வருடத்தில் இரண்டாயிரத்து 418 விபத்துக்கள் மூலம் 2538 பேர் உயிரிழந்திருப்பதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 1009 மோட்டார் சைக்கிள் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அத்தோடு 171 பாடசாலை மாணவர்கள் விபத்துக்குள்ளாகி உள்ளனர்.

இவர்களில் நான்கு பேர் உயிரிழந்தனர். 28 பிள்ளைகள் படுகாயம் அடைந்தனர். 15 பேர் நீண்டகால உபாதைக்கு உள்ளானதாக பிரதி பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டினார்.

கடந்த வருடத்தில் பாதுகாப்பான தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 684 பேர் சட்டத்தின் பிடியில் சிக்கியதாக அவர் குறிப்பிட்டார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...