நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சியிலுள்ள அலுவலகமான அறிவகம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் அங்கு வந்து செல்லும் அனைவரும் பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அலுவலகத்தக்கு உள்ளே எவரையும் உட்செல்லவும் அனுமதிக்கவிடாமல் தடுத்து நின்றுள்ளனர்.
கரைச்சி, பளை பிரதேச சபையின் தவிசாளர்கள் சிறீதரன் எம்.பியைச் சந்திக்க சென்ற வேளை பொலிஸாரால் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
சிறீதரன் எம்.பி பொலிஸாரிடம் ஏன் இவ்விடத்தில் நிற்கின்றீர்கள்? எதற்கு அலுவலகத்துக்கு வருவோருக்குத் தடையை ஏற்படுத்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
அதற்குப் பொலிஸார் ‘‘மேலிடத்துக்கு உத்தரவு’’ என பதிலளித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a comment