23 657af6ba0b713 md
இலங்கைசெய்திகள்

வானில் கண்கவர் ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு இன்று இரவு: ஒரு மணி நேரத்தில் 150 விண்கற்கள் தெரியும்!

Share

2025ஆம் ஆண்டின் மிகவும் கண்கவர் விண்கல் பொழிவு இன்று (டிசம்பர் 13) இரவு வானில் தெரியும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது “ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு” (Geminids Meteor Shower) என்று அழைக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

இந்த விடயத்தை விண்வெளி விஞ்ஞானியும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவில் (டிசம்பர் 13, நள்ளிரவு அல்லது டிசம்பர் 14 அதிகாலை) கிழக்கு திசையிலிருந்து இந்த விண்கல் பொழிவு தெரியும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஒரு மணி நேரத்தில் சுமார் 150 விண்கற்கள் வானில் பிரகாசமாகத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜெமினிட்ஸ் விண்கல் பொழிவு மற்ற விண்கல் மழைகளைப் போலல்லாமல், வால் நட்சத்திரத்தின் எச்சங்களிலிருந்து உருவாகாமல், 3200 பேதான் (3200 Phaethon) எனப்படும் சிறுகோளின் சிதைவிலிருந்து உருவானது என்ற தனித்துவத்தைக் கொண்டுள்ளது.

இந்தக் கண்கவர் நிகழ்வைக் காணச் சிறப்பு உபகரணங்கள் எதுவும் தேவையில்லை; வெறும் கண்களாலேயே இதைப் பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
image ef87f2c5fb
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மதுக்கடை வேண்டாம், கல்வி வேண்டும்: நோர்வுட்டில் 25 ஆண்டு கால மதுபான சாலைக்கு எதிராகப் பாரிய போராட்டம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் மதுபானக் கடையின்...

25 6909c96b1b5a4
செய்திகள்இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்: உலகச் சந்தைப் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த வாரம் அறிவிப்பு!

இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய, ஜனவரி மாதத்திற்கான விலை திருத்தம் இந்த வாரத்திற்குள்...

23 64dfa15d1421d
இலங்கைஅரசியல்செய்திகள்

தையிட்டி போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை: வாகனங்களை இலக்கு வைத்து பொலிஸார் விசாரணை – சிறீதரன் எம்.பி சாடல்!

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விகாரையை அகற்றுமாறு கோரிப் போராடும் மக்கள் மீது அரசாங்கம் திட்டமிட்ட...

images 4 1
செய்திகள்இந்தியா

அயல்நாடுகள் இந்தியாவின் உதவியை மதிக்க வேண்டும்: வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திட்டவட்டம்!

அயல்நாடுகளுக்கு இந்தியா அளிக்கும் உதவிகளை அந்த நாடுகள் மதிக்க வேண்டும் என இந்திய வெளியுறவுத் துறை...