2 43
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறியொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பயிற்சி நெறி இன்று (27-05-2025) மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் உற்பத்திகளை அதிகரித்தல், அவற்றுக்கான தரத்தை உயர்த்துதல், உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அத்துடன் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைபள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளார் பிரிவுகளை சேர்ந்த சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும் சவால்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...