2 43
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறி

Share

கிளிநொச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் சுயதொழிலை மேம்படுத்துவது தொடர்பான பயிற்சி நெறியொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பயிற்சி நெறி இன்று (27-05-2025) மாவட்ட சமூக சேவைகள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் சுயதொழில் உற்பத்திகளை அதிகரித்தல், அவற்றுக்கான தரத்தை உயர்த்துதல், உரிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், அத்துடன் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த பயிற்சிநெறி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி கண்டாவளை பச்சிலைபள்ளி பூநகரி ஆகிய பிரதேச செயலாளார் பிரிவுகளை சேர்ந்த சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் மற்றும் சவால்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...