அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!
இலங்கைசெய்திகள்

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!

Share

அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு!

விவசாய பயிர்களுக்கு நீர் வழங்குமாறு கோரி விவசாயிகள் குழுவொன்று மாத்தறைக்கு படையெடுக்கவுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் வீட்டிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, அமைச்சரின் வீட்டிற்கு செல்லும் அனைத்து வீதிகளிலும் பொலிஸ் தடுப்புகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் குழுக்கள் நுழைவதை தீவிரமாக சோதனை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஹம்பாந்தோட்டையில் இருந்து மாத்தறைக்கு பிரவேசிக்கும் பகுதியிலும், கொழும்பில் இருந்து மாத்தறைக்குள் நுழையும் பகுதியிலும் இரண்டு விசேட பொலிஸ் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இரவு பகலாக தொடர்ச்சியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதாகவும், 25 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 15 இற்கும் மேற்பட்ட இரும்பு சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், தேவையெனில் இராணுவத்தை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை, கடும் வறட்சி நிலவும் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் தண்ணீர் கோரி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவுக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வெளியிட்டு வரும் நிலையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 3 6
உலகம்செய்திகள்

பிரித்தானியா ஸ்தம்பிக்குமா? ஒரு வார கால முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள ‘he Great British National Strike அமைப்பு!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் புலம்பெயர்தல் விவகாரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நாடு தழுவிய ரீதியில் ஒரு...

Dead 1200px 22 10 28 1000x600 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: மகள் மூட்டிய குப்பைத் தீ பரவி படுக்கையில் இருந்த தாய் பரிதாப மரணம்!

யாழ்ப்பாணம் – அரியாலையில் மகள் மூட்டிய குப்பைத் தீயானது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் பரவியதில், படுக்கையில்...

archuna bail
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எம்.பி இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை அச்சுறுத்தல்: மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு இன்று(29) மல்லாகம்...

virat kohli 183099488 sm
விளையாட்டுசெய்திகள்

விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடீர் மாயம்: நள்ளிரவு ‘ஷாக்’ கொடுத்துவிட்டு மீண்டும் திரும்பிய ‘கிங்’!

இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் (@virat.kohli) இன்று (30) அதிகாலை...