5 51
இலங்கைசெய்திகள்

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

Share

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை இந்தச் சோதனைகள் தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்புகளுக்காக, மேலதிகமாக விசேட அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளை காட்சிப்படுத்துவதில் விசேட அவதானத்துடன் சோதனைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பண்டிகைக் காலங்களில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் வாடிக்கையாளர்கள் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்க முடியும் எனவும் நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....