24 66adbcd458bfb
இலங்கைசெய்திகள்

தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்: எச்சரிக்கை விடுத்துள்ள ஆணைக்குழு

Share

கடந்த தேர்தல்களில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் அந்த வாக்களிப்பு நிலையத்தை இரத்துச் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரலாற்றில் இவ்வாறான பிரகடனங்கள் இரத்துச் செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பீ. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ச, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
articles2FVIVe6pP2puuipbGIu7f9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாவலப்பிட்டி பிரதேச செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: மின்னஞ்சலால் பரவிய பதற்றம் – தேடுதல் வேட்டை!

நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரள பிரதேச செயலகத்தின் களஞ்சிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட...

lXCde1e0G7ygeggbmYlO4CSM1NM
இலங்கைசெய்திகள்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு ஜாக்பாட்: ஒரே நாளில் 62 மில்லியன் ரூபாய் வருமானம்!

நத்தார் பண்டிகை மற்றும் தற்போது நடைபெற்று வரும் பாடசாலை விடுமுறைக்காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் சுங்க வரி...

MediaFile 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியம் பெறுவதற்கான கால எல்லை நீடிப்பு!

‘டித்வா’ (Titli) புயல் மற்றும் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியதாரர்கள்...

Nalinda Jayathissa
செய்திகள்அரசியல்இலங்கை

நிபந்தனைகளை மீறினால் அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரம் ரத்து: அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை!

தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திர நிபந்தனைகள் மீறப்படும் பட்சத்தில், அவற்றை மீளப்பெறும் அதிகாரம் பாடத்திற்கு பொறுப்பான...