24 66adbcd458bfb
இலங்கைசெய்திகள்

தேர்தல் பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம்: எச்சரிக்கை விடுத்துள்ள ஆணைக்குழு

Share

கடந்த தேர்தல்களில் தேர்தல் வன்முறைகள் இடம்பெற்ற இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த விசேட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான இருபதுக்கும் மேற்பட்ட இடங்கள் கண்டறியப்பட்டு அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மேலும், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வாக்களிப்பு நிலையத்திலும் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் அந்த வாக்களிப்பு நிலையத்தை இரத்துச் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரலாற்றில் இவ்வாறான பிரகடனங்கள் இரத்துச் செய்யப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை 14 வேட்பாளர்கள் தமது கட்டுப்பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி, ரணில் விக்ரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ. எஸ். பி. லியனகே, சஜித் பிரேமதாச, பீ. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ச, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய, அஜந்த டி சொய்சா, கே. ஆனந்த குலரத்ன, சரத் மனமேந்திர, பத்தரமுல்லை சீலரதன தேரர் மற்றும் அக்மீமன தயாரத்ன தேரர் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையர்களின் அதீத சீனிப் பயன்பாடு: ஈறு நோய் பாதிப்பு அதிகரிப்பு – எச்சரிக்கை விடுத்த வைத்தியர்!

இலங்கையில் ஒவ்வொரு இரண்டு பெரியவர்களில் ஒருவருக்கு ஈறு தொடர்பான நோய்கள் இருப்பதாக வாய் சுகாதார விசேட...

09 6
செய்திகள்இலங்கை

பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அரச அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு: பாதுகாப்பு அமைச்சின் அறிவிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பேரிடர் நிலைகளின் போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...

08 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் விநியோகத்தை எளிமைப்படுத்தும் புதிய செயலி: யாழ். இந்துக் கல்லூரி மாணவரின் புத்தாக்கம்!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தீர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர...

01 6
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் இலங்கைப் பெண் மற்றும் அவரது துணைவர் சடலமாக மீட்பு: காவல்துறை விசாரணை!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள லோட்ரோப் பள்ளத்தாக்கு பகுதியில், ஹேர்ன்ஸ் ஓக் (Hernes Oak) எனும் கிராமப்புறப்...