rtjy 105 scaled
இலங்கைசெய்திகள்

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

Share

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை

இலங்கையில் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தும் விசேட பாதுகாப்பு நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடவடிக்கையானது நேற்று(10.09.2023) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையிலான குழுவினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது 4000க்கும் மேற்பட்ட அதிகாரிகளை உள்ளடக்கி நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளது.

இந்நிலையில் மேல் மற்றும் தென் மாகாணங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இந்த இரண்டு மாகாணங்களிலும் முக்கியமான பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடிப்படை, குற்றப் புலனாய்வுத் துறை, அரச புலனாய்வு சேவை , பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பிற பொலிஸ் பிரிவுகள் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையானது மறு அறிவிப்பு வரும் வரை காலவரையின்றி தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 6 4
இலங்கைசெய்திகள்

சிபெட்கோ மாதாந்த விலை திருத்தம்: டிசம்பர் மாத எரிபொருள் விலைகளில் மாற்றமில்லை!

‘சிபெட்கோ’ (CEYPETCO) எனப்படும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றமில்லை...

images 5 2
செய்திகள்இலங்கை

கொழும்பு – கண்டி வீதி: யக்கலவில் பாலம் இடிந்து விழுந்தது; போக்குவரத்து தடை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக, கொழும்பு – கண்டி பிரதான...

landslide 1
செய்திகள்இலங்கை

அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் 159 ஆக உயர்வு; 203 பேர் காணாமல் போயுள்ளனர் – அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

நாட்டில் ஏற்பட்ட பேரழிவுகளில் சிக்கி இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 159 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன்,...

images 4 3
செய்திகள்இந்தியாஇலங்கை

இலங்கைக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், உடனடி உதவிகளை அறிவித்தார் பிரதமர் மோடி!

தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “திட்வா” (DITWA) புயலின் காரணமாகத் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த...