பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள், தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் மேற்படி தெரிவித்துள்ளார்.
#SriLankaNews