17 22
இலங்கைசெய்திகள்

செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

Share

செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி விசேட தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகள் விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த விநியோகம் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் வீட்டிலேயே தங்கி அதனைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார்.

வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகிக்கும் நடவடிக்கை செப்டம்பர் 14 ஆம் திகதியுடன் முடிவடையும் என்றும் அதன் பிறகு வீடு வீடாகச் சென்று வாக்கு அட்டைகள் விநியோகம் நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தேர்தல் நாள் வரை, அவர் கடிதங்களை பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று, சாதாரண நேரங்களில் தனது அடையாளத்தை உறுதிப்படுத்தி, தனது கையொப்பத்தைப் பயன்படுத்தி தனக்குச் சொந்தமான உத்தியோகபூர்வ வாக்கு அட்டைகளை பெற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...