ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் இன்று!

ranil 1

ஆளுங்கட்சியின் விசேட நாடாளுமன்றக்குழுக் கூட்டம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதியால் நாளை இடைக்கால வரவு – செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இந்த அவசர கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குழுக்களின் நியமனம் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

 

Exit mobile version