24 6620ac5a607b1
இலங்கைசெய்திகள்

குற்றங்களை கண்டறிய விசேட நடவடிக்கை

Share

குற்றங்களை கண்டறிய விசேட நடவடிக்கை

குற்றங்களைக் கண்டறிவதை மேம்படுத்துவதற்கு பொலிஸ் சிசிடிவி (CCTV) கமரா அமைப்புடன் பொது மற்றும் தனியார் சிசிடிவி அமைப்புகளை ஒருங்கிணைக்க பொலிஸ் திணைக்களம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆரம்ப கட்டத்தில், கொழும்பு (Colombo) நகரில் உள்ள குடியிருப்புக்கள் உட்பட தனியார் நிறுவனங்களில் இருந்து சுமார் 2000 சிசிடிவி கமெராக்கள் பொலிஸாரின் வலையமைப்புடன் இணைக்கப்படவுள்ளதுடன் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.

இரண்டாம் கட்டமாக, நாடு முழுவதும் உள்ள சிசிடிவி கமரா அமைப்புக்களுடன் பொலிஸ் சிசிடிவி அமைப்பை ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கொழும்பில் உள்ள வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்க வகையில் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், குற்றச் செயல்களைத் தடுப்பதில் அவற்றின் தற்போதைய பங்களிப்பு குறைவாக உள்ளதுடன் பொலிஸ் திணைக்களத்திடம் 176 சிசிடிவி கமராக்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...