7 19
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மருந்து இறக்குமதி தொடர்பில் சிறப்பு விசாரணை

Share

அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஹியூமன் இம்யூனோகுளோபுலின் மருந்து பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக பரிசீலிக்க சட்டமா அதிபரால் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான மருந்து பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் மஹேன் வீரமன், அமலி ரணவீர மற்றும் பிரதீப் அபேரத்ன ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

இருப்பினும், சம்பந்தப்பட்ட குழுவில் உள்ள மஹேன் வீரமன் செப்டம்பரில் ஓய்வு பெற உள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நீதிபதி மஹேன் வீரமன் பதவி விலகவுள்ளமை குறித்து தலைமை நீதிபதிக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...