ரணிலின் சகா வெளியிட்ட முக்கிய தகவல்!
இலங்கை மக்களுக்கு இந்த நேரத்தில் தேர்தல் தேவையில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன Vajira Abeywardana தெரிவித்துள்ளார்.
காலியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை விட தற்போது மக்களுக்குத் தேவை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டு இந்த நாளில் இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்தமைக்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு விசேட கௌரவம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

