ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி
2023 – 2024 ஆம் ஆண்டுகளுக்கான சனத்தொகை மற்றும் குடியிருப்பு கணக்கெடுப்பு முன்னெடுக்குமாறு உத்தரவிட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை வெளியிட்டுள்ளார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசியக்கொள்கை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.