25 68459db5d1db3
இலங்கைசெய்திகள்

ஒரே நாளில் பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய நூற்றுக்கணக்கானோர்!

Share

நாடளாவிய ரீதியில் பொலிஸாரால், நேற்று சனிக்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 438 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, 155 கிராம் 448 மில்லி கிராம் ஹெரோயினுடன் 127 சந்தேகநபர்களும், 499 கிராம் 526 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 158 சந்தேகநபர்களும், 3.5 கிலோகிராம் கஞ்சாவுடன் 135 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், 1.1378 கிலோகிராம் மாவா போதைப்பொருளுடன் 06 சந்தேக நபர்களும், 157 போதைமாத்திரைகளுடன் 12 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில், போதைப்பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை தடுப்பதற்காக கடந்த ஏப்ரல் மாதம் 13ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பல சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், பொலிஸாரின் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...