rtjy 41 scaled
இலங்கைசெய்திகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்

Share

அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணிலுக்கு கிடைத்துள்ள அதிகாரம்

நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது என வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள இந்த மக்கள் ஆணை நேரடியாகக் கிடைத்தது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவுக்காகும். அந்தப் பதவிக்காலத்தின் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதே பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களாகும்.

அதற்குச் சட்டத்தில் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. நாடு ஸ்திரமற்ற நிலைக்கு செல்வதற்கு இடமளிக்காமல் அடுத்த தேர்தல் வரைக்கும் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான விரிவான அதிகாரம் பதில் ஜனாதிபதிக்கு கிடைக்கின்றது.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் நாமே தெரிவு செய்தோம். அவர் ஐ.தே.கட்சியின் தலைவராக இருந்தாலும் தற்போது அவர் பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் ஜனாதிபதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....