15 15
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

Share

இலங்கைக்கான நிதியுதவிகளை மீள ஆரம்பிக்கும் தென் கொரியா

தென் கொரியாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியான (கொரியா எக்ஸிம்பேங்க்), இலங்கையின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி சலுகைக் கடன் திட்டங்களை மீண்டும் ஆரம்ப்பிப்பதற்கான அதன் முடிவை இலங்கையின் நிதி அமைச்சகத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தென்கொரிய உத்தியோகபூர்வ கடன் வழங்கும் குழுவும், இலங்கையும், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்த பின்னர் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், ருவன்வெல்ல நீர் வழங்கல் திட்டம் உட்பட ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் நிர்மாணத் திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை மீள ஆரம்பிக்க இந்த தீர்மானம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரிய குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.

இது நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே வேளையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் ஸ்திரப்படுத்துவதற்கும் பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முக்கிய முடிவின் மூலம், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தித் திட்டம், பயன்பாட்டுத் திட்டங்கள், சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டங்கள், கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட இடைநிறுத்தப்பட்ட திட்டங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படவுள்ளன.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...