பங்களாதேஸின் மிர்பூரில், பங்களாதேஸ் மற்றும் தென்னாப்பிரிக்க வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான 4 நாள் டெஸ்ட் போட்டியில், வெறுக்கத்தக்க நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
போட்டியின் இரண்டாவது நாளில் தென்னாபிரிக்க வீரர் ட்செபோ ந்டுலி மற்றும் ரிப்பன் மொண்டோல் இடையேயான முறுகல், கட்டுப்பாட்டை மீறி கைகலப்பு வரை சென்றுள்ளது.
போட்டியில் ந்டுலி வீசிய பந்தை ரிப்பன் மொண்டோல் 6 ஓட்டங்களாக மாற்றியதையடுத்தே இந்த கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த கைகலப்பு தொடர்பான காட்சிகள், தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
இது, கனவான்களின்(Gentlemen) விளையாட்டாக கருதப்படும் கிரிக்கெட்டுக்கு பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.