6 15
இலங்கைசெய்திகள்

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

Share

இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு

நாடளாவிய ரீதியில் சற்று முன்னர் தீடிரென மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தற்போது மின்சாரத் தடை சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

திடீர் மின்சார தடையின் நிமித்தம் வைத்தியசாலைகள், தொழில் நிலையங்கள் மற்றும் அவசர சேவைகள் என்பன தடைபெற்று மக்கள் பலதரப்பட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

முன்னறிவிப்பின்றி இவ்வாறு மின்சார தடை விதிக்கப்பட்டமை குறித்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டிருந்தால் என்னவாகும் என்பது குறித்தும் மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...