3 2
இலங்கைசெய்திகள்

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

Share

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

மொனராகலையில் இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாய் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொம்பகஹவெல பிரதேசத்திலுள்ள மகனின் காணியிலுள்ள மரத்தில் பலாப்பழம் பறித்த தாய் மற்றும் தந்தை மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த காணியை பிள்ளைக்கு தானமாக வழங்கிய பெற்றோர் மற்றுமொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு உணவு தயாரிப்பதற்காக மகனின் காணியிலுள்ள பலாமரத்திலிருந்து காய் ஒன்றை பறித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தனது தாயை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...