3 2
இலங்கைசெய்திகள்

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

Share

தாயை கொடூரமாக தாக்கிய மகன் – மனைவி, பிள்ளைகளுடன் தப்பியோட்டம்

மொனராகலையில் இரவு உணவு தயாரிப்பதற்காக மரத்திலிருந்த பலாப்பழத்தைப் பறித்த தாய் மீது கடுமையாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொம்பகஹவெல பிரதேசத்திலுள்ள மகனின் காணியிலுள்ள மரத்தில் பலாப்பழம் பறித்த தாய் மற்றும் தந்தை மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காயமடைந்த தாய் சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த காணியை பிள்ளைக்கு தானமாக வழங்கிய பெற்றோர் மற்றுமொரு வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், இரவு உணவு தயாரிப்பதற்காக மகனின் காணியிலுள்ள பலாமரத்திலிருந்து காய் ஒன்றை பறித்துள்ளார். இதனால் கோபமடைந்த மகன் தனது தாயை பலமாகத் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட மகன், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share
தொடர்புடையது
001111
இலங்கை

நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரத்தில் அலட்சியப்படுத்தப்பட்டதா புலனாய்வுத் துறையின் தகவல்கள்?

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் இடம்பெறுவதற்கு 3 அல்லது 4 நாட்களுக்கு முன்பே புலனாய்வுப் பிரிவுகள் மூலம்...

india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...