10 12
இலங்கைசெய்திகள்

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி

Share

தேங்காய் எண்ணெய் விற்பனையில் மற்றுமொரு மோசடி

தேங்காய் எண்ணெய் நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக கூறி பாம் எண்ணெய் இறக்குமதி செய்ய கைத்தொழில் அமைச்சு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி இந்த பாம் எண்ணெய் கையிருப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளதாகவும், இவை சந்தைக்கு விடப்பட்டதன் பின்னர், தேங்காய் எண்ணெயில் கலந்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெறும் அபாயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பாம் எண்ணெய்யை பெருமளவில் இறக்குமதி செய்தால், நாட்டில் உள்ள தேங்காய் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் மற்றும் உள்ளூர் தேங்காய் எண்ணெய் தொழிற்சாலைகளை பராமரிக்க முடியாது கடும் நெருக்கடி ஏற்படும் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 3,849 மெற்றிக் தொன் எண்ணெய் கைத்தொழில் அமைச்சின் அனுமதியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியினை பெறவில்லை என்றும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...